தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக 104 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஹயக்ரீவர் நகர் 3வது குறுக்கு தெருவில் உள்ள
மாநகராட்சி விளையாட்டு திடலில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி
மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.58.00 இலட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டு
அரங்கம் கட்டுமானப் பணிகளைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன்
ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.58 லட்சம் செலவில் உள் விளையாட்டு அரங்கத்தை
அமைக்க எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுமான பணி தொடங்கி
வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், மருத்துவமனையிலிருந்து ஒரு பெண் வந்தது கூடவா மருத்துவர்களின்
அலட்சியம் என்பது. மருத்துவத் துறையின் கட்டமைப்பைக் கேள்விக்குறியாக்க வேண்டும்
என்பது போல் உள்ளது. மருத்து தட்டுப்பாடு என ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு தந்து உள்ளார். சேலத்தில் மருந்து தட்டுப்பாடு என கூறி 4 மணி நேரத்தில் சென்று ஆய்வு செய்தேன் என கூறினார்.
தமிழகத்தில் 32 மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. எந்த கிடங்கிற்கு வேண்டுமானாலும் எந்த கட்சி அரசியல் தலைவரும் சென்று இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம். பொது மக்களுக்கு எந்த மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகம் நடத்தும் போது 3 மணிக்கு பெண் மருத்துவ மனையிலிருந்து வெளியேறிச் சென்று தண்டவாளத்தில் அடிப்பட்டதற்கு மருத்துவர்கள் தள்ளி விட்டதை போல் தோன்றதை உருவாக்குவது மருத்துவ சேவையைக் கேவலப்படுத்துவது போல் இருக்கிறது என அவர் கூறினார்.