”நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் பாரபட்சமின்றி நடவடிக்கை” என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்கள் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும், தி.மு.க.வின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது..
” விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாக காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணி நம்மை எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றது
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்.
தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.