டாஸ்மாக்கை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்: தமிழக அரசு

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பான சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள்…

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பான சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்க இயலும்.

குறிப்பிட்ட ஓர் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் சட்டவிதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.