பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெத்தேல் நகரில் உள்ள வணிக நிறுவனங்களின் மின்இணைப்பை உடனடியாக துண்டித்து ஆக்கிரமிப்பை அகற்றவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடைபெறுவதால் வீடுகளுக்கான மின் இணைப்பை கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.
அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்
இந்நிலையில், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பெத்தேல் நகரில் வசிப்போர் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்க பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தரப்பில் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.