இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்: சீமான்

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி சென்னை…

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் பொறுத்துக்
கொள்ள மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி சென்னை
கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளேன் என்று கூறியது யார்? நான் என்றும் ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை. நாட்டுக்காக தான் அரசியல் செய்கிறேன்.

பைபிள், குரானில் கூறியுள்ளதைப் போன்று இன்று தேவனின் ஆட்சி முறையா இங்கு
நடக்கிறது, எல்லாம் சாத்தானின் ஆட்சி முறையாக தான் இருக்கிறது. நேற்று வரை பெரும்பான்மையாக இருந்த ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா
இன்று சிறுபான்மையினரா? அவர்கள் மதம் மாறிய காரணத்தினால் அவர்களை
சிறுபான்மையினர் என்று கூறிவிட முடியுமா? தமிழ் மொழி பேசும்
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்த மண்ணின், இனத்தின் பெரும்பான்மை மக்கள்.

மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி செய்வதை எப்படி இவர்கள்
சகித்துக் கொள்கிறார்கள். எனக்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுடன் இருக்கும்
அன்பின் உறவின் வெளிப்பாடுதான் இது. உங்கள் மீது இருக்கும் பேரன்பின்
வெளிப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்றால் நமக்குள் இருக்கும் உறவில் என்ன
அர்த்தம் இருக்கிறது? மீண்டும் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களிக்கும் தவறை
அவர்கள் செய்யக் செய்யக் கூடாது என்பதை சுட்டிக்காட்டவே இந்த கருத்தை
கூறியிருந்தேன்

உலக வரலாற்றில் மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை இனம் அடையாளப்படுத்துவது இல்லை. மொழியின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் இனத்தின் பெரும்பான்மையினர்.

எனக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று பாரபட்சதோடு நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த இனத்தை அழித்த காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும்
அதற்கு துணை போன திமுக போன்ற கட்சிகளுக்கும் இந்த மக்கள் இன்னும் வாய்ப்பளிக்கிறார்கள் என்ற கோபத்தில் இந்த கருத்தை கூறியுள்ளேன்.

இவ்வாறு சீமான் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.