முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்விளையாட்டு

”1983 உலகக் கோப்பையில் இந்திய வீரர்களிடம் எந்தவொரு அற்புதமான பங்களிப்பையும் கண்டு வியக்கவில்லை”- ஆண்டி ராபர்ட்ஸ் பேச்சு!

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. விண்டீஸ் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தற்கான காரணங்கள் குறித்து, விண்டீஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளார் ஆண்டி ராபர்ட்ஸ் பகிர்ந்துள்ளார்.

1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற மிகவும் பலமான மேற்கிந்திய தீவுகள் அணி, 1983 இல் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. உலகமே அதிர்ந்து போன இந்திய அணியின் அந்த வெற்றி, பெரிதளவில் பேசப்பட்டது. இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றி 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் ஆண்டி ராபர்ட்ஸ்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”கிரிக்கெட் விளையாட்டு என்பது எப்போதுமே அதிர்ஷ்டத்தை மையமாக கொண்டது. 1983 முன்னதாக நாங்கள் உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வியே சந்தித்ததே இல்லை. 1983 இல் நாங்கள் இரண்டு முறை மட்டுமே தோல்வியை தழுவினோம். அந்த இரண்டு தோல்விகளும் இந்தியாவுடனான போட்டிகளில் தான். அது இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. ஆனால் அந்த தொடருக்கு பின் நாங்கள் இந்தியாவை 6-0 என வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் எங்கள் அணி 180 க்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததற்கு காரணம், நாங்கள் அதிக நம்பிக்கையுடன் விளையாடியதும், மன நிறைவுடன் விளையாடியதும் தான். விவ் ரிச்சர்ட்சனின் விக்கெட் மிகவும் முக்கிய திருப்புமுனையாக மாறியது. அவரது விக்கெட்டுக்கு பின் நாங்கள் எழுந்து வரவே முடியவில்லை. 1975 மற்றும் 1979 ஆகிய இறுதிப் போட்டிகளில் விவ் ரிச்சர்ட்ஸ் எங்களுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்.

ஆனால் இந்திய அணியில் இருந்து யாரும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. குற்ப்பாக ஒரு பேட்ஸ்மேன் கூட 50 ரன்கள் குவிக்கவில்லை, அதே போல ஒரு பந்துவீச்சாளார் கூட 5 விக்கெட்டுகளோ அல்லது 4 விக்கெட்டுகளோ வீழ்த்தவில்லை. இந்திய வீரர்களிடம் இருந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்த ஒரு அற்புதமான பங்களிப்பையும் கண்டு நான் வியக்கவில்லை.” என அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்… தங்கச்சிலையால் தவித்த சந்திரபாபு…

Web Editor

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Editor

உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading