31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான்; நடிகர் கார்த்தி பேட்டி

சர்தார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான் என்று கூறினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கார்த்தி நடிப்பில்
வெளியான “சர்தார்” படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார், இயக்குனர் பி.எஸ்.மித்ரன், எடிட்டர் ரூபன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், ஒரு குழுவாக இருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். அது பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்தேன். அதற்கு பிறகு சர்தார் படத்தில் டீம் எபோர்ட் இதில் இருந்தது. இந்த படத்தின் கதையை சொல்லிவிடலாம். ஆனால் திரைப்படமாக எடுக்க முடியாது. அந்த அளவிற்கு நுணுக்கமான படம் சர்தார். அதை சிறப்பாக செய்து முடித்துள்ளார் இயக்குனர்.

சர்தார் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது பெருமையாக இருந்தது. நாட்டுக்காக
தன்னை சார்ந்த அத்தனையும் தியாகம் செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். அந்த அளவிற்கு உள்ள சர்தார் கதாபாத்திரம் நெருக்கமாக இருந்தது. சர்தார் ஸ்பை படம் என்பதால் நெட்பில்க்ஸ், அமேசான் தளங்களில் உள்ள படங்களை வைத்து ஒட்டி பார்ப்பார்கள் என தெரியும். அதை மனத்தில் வைத்து பணியாற்றினோம்.

காசை விட மரியாதை, கை தட்டல்களுக்காக தான் உழைக்கிறோம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நான் சந்தோசமாக உள்ளீர்கள் என்று கேட்டால் இல்லை, நிம்மதியாக உள்ளேன் என்றார். சர்தார் படத்திற்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் வரவேற்பை கொடுத்துள்ளனர். எங்கள் உழைப்பை அங்கீகரித்தார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து கைதி இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டில் நடக்கும் என்றார். அதோடு தளபதி 67ல் உள்ளீர்களா என்ற கேள்விக்கு நடிக்க ஆசை தான் அது மிகப்பெரிய பணி என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் பேசுகையில், இந்த வருடத்தில் மூன்று வெற்றி படங்கள் கொடுத்ததற்கு கார்த்திக்கு வாழ்த்துக்கள். அவருடைய கடின உழைப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவர் பாடிய பாடல் 7 மணிநேரம் பாடல் பதிவு நடைபெற்றது. காரணம் அந்த பாடல் மிக கஷ்டமான ஒன்று. ஆயிரத்தில் ஒருவன், கொம்பன், இப்பொழுது சர்தார் மூன்று படங்கள் செய்துள்ளேன். இந்த கூட்டணி இனிமேலும் தொடரும் என நம்புகிறேன் என்றார்.


தொடர்ந்து பேசிய இயக்குனர் பி.எஸ் மித்ரன், சர்தார் படம் எழுத நினைக்கும் போது எந்த தயக்கமும், பயமும் இல்லை. சரியான ஒரு கதையை கொண்டு சேர்க்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. படம் ஆரம்பிக்கும் பொழுது இந்த கப்பல் புயலுக்கு தான் போகிறது என தெரியும். அந்த அளவிற்கு கஷ்டமான வேலைகள் இந்த படத்தில் இருந்தது.

என்னுடைய கற்பனைக்கு முழு சுதந்திரத்திரம் கொடுத்து, தயாரிப்பு நிறுவனம்
சார்பாக ஒரு அழுத்தம் கூட கொடுக்காமல் பணியாற்ற அனுமதித்தார்.
அருமையான இசையை கொடுத்ததற்கு இசையமைப்பாளர் ஜி.வி.க்கு நன்றி.
கார்த்தியின் கடின உழைப்பு கண்டு ஆச்சரியப்பட்டேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading