தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் தியாகத்தையும், தீரத்தையும், நற்பண்புகளையும் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு காலையில் இருந்து அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி ஆகியோரும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜு மற்றும் எம்.எல்.ஏ க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் (எ) செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!
"தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! pic.twitter.com/4Fq7y8cjSw
— M.K.Stalin (@mkstalin) October 30, 2022
உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேவர் ஜெயந்தியையொட்டி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.