காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!

அகமதாபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் பார்த் கொதேகர். முற்றிலும் காகிதம் கொண்டு பல கலை பொருட்கள் செய்து ஓர் காகித அருங்காட்சியகத்தையே படைத்திருக்கிறார். இவர் படைப்புகள் அனைத்தும் பார்ப்பவர்களை கண் கவரும் விதமாக…

அகமதாபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் பார்த் கொதேகர். முற்றிலும் காகிதம் கொண்டு பல கலை பொருட்கள் செய்து ஓர் காகித அருங்காட்சியகத்தையே படைத்திருக்கிறார். இவர் படைப்புகள் அனைத்தும் பார்ப்பவர்களை கண் கவரும் விதமாக அமைந்துள்ளது. பறவையின் இறக்கைகள், மலர்கள், மரங்கள், பட்டாம் பூச்சிகள், சினிமா கதாபாத்திரங்கள், மனித இதயம், உருவப்படங்கள் என இவரது படைப்புகள் நீண்டு கொண்டே போகிறது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “சிறுவயது முதல் காகிதங்கள் மீது அளவற்ற பற்று கொண்டேன். பொழுதுபோக்கிற்காக தொடங்கி தற்போது இதையே என் தொழிலாக மாற்றியுள்ளேன். நான் தினந்தோறும் காணும் காட்சிகளை காகிதத்தில் செதுக்குவேன். தற்போது காகிதக் கலைஞனாக உருவாகியுள்ளேன். மனநிறைவுடன் இத்தொழிலை செய்து வருகிறேன்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.