கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தக் கூடாது; புதிய உத்தரவு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இனி கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலரங்கங்களில் 1,024 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் கற்றல்…

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இனி கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலரங்கங்களில் 1,024 விரிவுரையாளர்
பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் கற்றல் – கற்பித்தல் பணி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளே தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக் கொள்ள முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அனைத்து கல்லூரிகளும் தங்களின் தேவைக்கேற்ப கௌரவ விரிவுரையாளர்களை
பணியமர்த்திக் கொண்ட நிலையில், 1,024 நிரந்தர பாலிடெக்னிக் விரிவுரையாளர்
பணியிடங்களுக்கு கடந்த 28-ம் தேதி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு,
அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால், ஏற்கனவே தொகுப்பூதியத்தில்
பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை இன்று முதல் பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் & சிறப்பு பயிலரங்குகளுக்கு
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏதேனும் கௌரவ விரிவுரையாளர் பணியிடம் தேவைப்படும் பட்சத்தில்
அதுகுறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறும், அனுமதி வழங்கும் பட்சத்தில் கௌரவ
விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.