கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று (நவம்பர் 19) ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி…

கனமழை காரணமாக இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று (நவம்பர் 19) ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, இன்றைய தினம் (நவம்பர் 19) மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.