இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அடுத்த மறைமலைநகரில் உள்ள விளையாட்டுத் திடலில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கு கூட்டமும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கும் நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதும் கிடைக்க வைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்ததற்கு பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா என்று கேள்வி எழுப்பினார். தற்போது இந்த கேள்வியை அனைவரும் கேட்க தொடங்கிவிட்டனர் என கூறினார்.