31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மழை, வெள்ளப் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் 11 மணி அளவில் உபரி நீர் திறக்கப்பட இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதால், கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே நாளில் 20.செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்ணிற்கு போன் செய்தும், 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளின் மழை, வெள்ளப் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading