ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

‘இந்தியன் 2’ படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார்.…

‘இந்தியன் 2’ படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு
தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இதனிடையே, தெலுங்கு ஹீரோ ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க, ஷங்கர் தயாராகி வருகிறார். இதை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் ஷங்கர் இயக்க இருக்கிறார்.

இதனால் ’இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
…………..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.