பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆசாராம் பாபு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன.இந்நிலையில் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013ம் ஆண்டில் சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தன்னை ஆசாராம் பாபு பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு தொடர்பான விசாரணை காந்திநகர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆசாரம் பாபு குற்றவாளி என நீதிபதி டி.கே சோனி நேற்று தீர்ப்பளித்தார். நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சாமியாரின் மனைவி மற்றும் மகன் உட்பட 6 பேருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 81 வயதாகும் சாமியார் ஆசாராம் பாபு தற்போது ஜோத்பூர் சிறையில் தண்டனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.