விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட்; வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்!…

என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் காலை 10.42…

என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-01 என்ற வழிகாட்டி செயற்கைகோள், 18 நிமிடங்கள் 37 நொடிகளில் வெற்றிகரமாக புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

https://twitter.com/KirenRijiju/status/1663056973762535425?s=20

இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்றும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.