விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக் கூடாது – டிடிவி தினகரன்

வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளின்  விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது என டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார். தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை…

வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளின்  விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது என டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது…

” டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையே தமிழக மக்கள்
விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது
என்பதுதான். மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என
கூறியிருக்கிறார்கள் அதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளின்  விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும்.

அதுதான் டெல்டா பகுதி மக்களின் கோரிக்கை.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடும் அதுதான். மோடி இபிஎஸ் ஓபிஎஸ்யை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை அதில் கருத்து சொல்வது நல்லதாக இருக்காது. மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.

மேலும் இத்திட்டத்தை  செயல்படுத்தினால் அமுமுக சார்பில் அந்த பகுதி மக்கள் விவசாயிகளோடு இணைந்து நிலக்கரி எடுக்கும்  முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் கார்த்திகேயன் மலேசியாவில்
நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். முதல் கட்டமாக அவருக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கியுள்ளோம்.  மேலும் அவர் விளையாடுவதற்கான அனைத்து உதவிகளையும் அம்மா முன்னேற்றக் கழகம் செய்யும் என” டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.