இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இசை உலகில் லதா மங்கேஷ்கர் ஆற்றிய பங்களிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், லதா மங்கேஷ்கரின் இழப்பு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகியான லதா மங்கேஷ்கர், உடல் நலக்குறைவால் காலமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவு மனவேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு இசை ஆர்வலர்களின் இதயத்திலும் லதா மங்கேஷ்கர் குடிக்கொண்டிருப்பார் என்றும் நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத ரத்னாவின் மறைவு வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், லதா மங்கேஷ்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமாள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பு, மரியாதை, அஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.