கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் கல்லூரி தேர்வு கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்பது வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக, இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்பு கல்லூரிகளில் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை மூன்று மடங்கு வரை உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: “விவசாயிகள் மேலும் அதிகாரம் பெற்றால்…” – பிரதமர் மோடி
அதேபோல, மாணவர்களின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் மற்ற பல்கலைக்கழகங்கள் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.