அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நீயூஸ்: விலையில்லா மிதிவண்டி விரைவில் வழங்கத் திட்டம்

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார். தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா…

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார்.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதங்களுக்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார். முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.5 லட்சம் பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.