இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். காரணம் குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது இங்கு வழக்கமாக உள்ளது.
மேலும் தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 24) ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.8,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







