சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை விற்கப்படுகிறது.
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பதால் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா