காங்கிரஸ் குறித்த கேள்வியை தவிர்த்த ஜி.கே வாசன், வேறு ஏதாவது பிரயோஜனமான கேள்வியை கேட்குமாறு பதில் அளித்துள்ளார்.
வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள கணக்கர் தெருவில் தொடங்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கைத் திறந்து வைக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் மற்றும் என்.ஆர்.தனபால் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். பின்னர், ரிப்பன் வெட்டி விளையாட்டு அரங்கினை திறந்துவைத்து இளைஞர்களுடன் சேர்ந்து இறகுப் பந்து விளையாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.சன் கூறுகையில், தமிழக மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு மாணவர்களின் நலனை உயர்த்த உறுதுணையாக இருக்க
வேண்டும். தற்போதுள்ள மாணவர்கள் உலக அளவில் தங்களது திறமையை
வெளிப்படுத்த தயாராகி உள்ளனர். அதை சதுரங்க ஒலிம்பிக் விளையாட்டில்
வெளிப்படுத்தினர். உலக அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. நாள்தோறும் கொலை,
கொள்ளை குறித்தான சம்மவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அவர்களை அடையாளம் கண்டு தண்டனை வழங்க வேண்டும். ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் அழிந்து வரும் நிலையில் தமிழக அரசு இதுவரை அது குறித்த தடையை அறிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் மக்களிடத்தில் வெளிப்படுத்துகிறது என்றார்.
பின்னர், காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வேறு ஏதாவது பிரயோஜனமான பயனுள்ள கேள்வியைக் கேட்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
-ம.பவித்ரா