கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து மருத்துவம் செய்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவர்கள் 3 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தி உள்ளதை தொடர்ந்து அவர் அடையாரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தன்னுடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தனியார் விடுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓ. பி.எஸ் தனிமைப்படுத்தி கொள்ளவுள்ளார்.