மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ம் ஆண்டு மலேசியாவில் நான்கு பிரதமர்கள் பதவியேற்றுள்ளனர். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் முகைதின் யாசின் தோல்வியுற்றார். இதனையடுத்து அங்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
அண்மைச் செய்தி : அறிவழகனின் ‘சப்தம்’ படத்தில் இணைந்த நடிகை லைலா
இந்நிலையில் மலேசியா முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆணையத்தின் தலைமையகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டது, பதவியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.







