திருப்பூர் மாவட்டத்தில் கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் பறிமுதல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி!

திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் மற்றும் 11 கிலோ புரோட்டா மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், சவர்மா சாப்பிட்டு…

திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் மற்றும் 11 கிலோ புரோட்டா மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த சுகாதாரத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த 2 நாட்களாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் கொடியம்பாளையம் பகுதியில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில்,
கெட்டுப் போன சிக்கன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக 42 கிலோ சிக்கன்,
11 கிலோ பழைய புரோட்டா மாவு , கெட்டுப்போன மசாலாக்கள் 3 கிலோ , 2 கிலோ
மைனஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 13 உணவகங்களுக்கு, ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.