உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோயிலின் பெரிய
கண்மாயில் மீன்பிடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர்.
மதுரை உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது கம்ப
காமாட்சி கருப்பசாமி கோயில், இந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட சுமார் 400
ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வாங்கி விட்ட
மீன்களை மீன்பிடி திருவிழா நடத்தி பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாய்யில் காத்திருந்த
நிலையில் அதிகாலை 5:30 மணிக்கு வெடி வெடிக்கப்பட்டவுடன் கண்மாய்க்குள் இறங்கி இறால், கெண்டை, கெழுத்தி, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அள்ளிச் சென்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களை அரசு குத்தகைக்கு விடப்பட்ட
போதும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த மீன் பிடி திருவிழாவை காரணமாக கொண்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இந்த ஒரு கண்மாய் மட்டும் ஏலம் விடவில்லை, தொடர்ந்து பாரம்பரியத்துடன்
பக்தர்கள் பொதுமக்கள் மீன் பிடி திருவிழா நடத்தி மீன்களை பிடித்துக் கொள்ள
மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இது போன்று அனைத்து கண்மாய்களுக்கும் மீன் பிடி திருவிழா நடத்தினால் கண்மாய் நீர் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படுவதோடும், கண்மாயும் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.,