தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அகதி என்ற வார்த்தையை நீக்கி, மறு வாழ்வு மையம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்ததை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு 317 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கதக்கது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றும் ஜீவன் தொண்டைமான் தெரிவித்தார்.