சிக்கலில் மாட்டியுள்ள ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை மீட்பதற்காக அமெரிக்காவில் உள்ள 11 பெரிய வங்கிகள் 30 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளன.
அமெரிக்காகவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் இன்னொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டது ஒட்டுமொத்த அமெரிக்க முதலீட்டு சந்தையையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதில், சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், 175 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளது. அதே போல், சிக்னேச்சர் வங்கி சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: 5 கோடி பார்வைகளை கடந்த ’லியோ’ படத்தின் ப்ரொமோ வீடியோ; ரசிகர்கள் உற்சாகம்
அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் திவாலாகலாம் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி கடந்த வாரம் திவாலாகிவிட்டது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாக சிலிகான் வேலி வங்கி திவால் கருதப்படுகிறது. வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் சொத்துகளுக்கும், கடன்களுக்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டு திவாலாகியுள்ளது.
இதையடுத்து, சிலிகான் வேலி வங்கியை அமெரிக்க அரசு மூடிவிட்டது. மேலும், டெபாசிட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், First Republic வங்கியும் 3வது வங்கியாக சிக்கலில் சிக்கியுள்ளது. சிலிகான் வேலி வங்கி திவாலைத் தொடர்ந்து, இந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் கடந்த வாரத்தில் சில மணி நேரங்களில் சுமார் 40 பில்லியன் டாலரைத் திரும்பப் பெற்றனர். வங்கி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால், வங்கியின் பங்கு விலைகள் 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, அந்த வங்கியை மீட்பதற்காக ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்காவின் 11 பெரிய வங்கிகள் உதவ முன்வந்துள்ளன. இதனால், தற்போது ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் பங்கு விலைகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளன. ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அவசரகால கடனாக 70 பில்லியன் டாலர்களை வங்கி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியும் பதற்றத்தை தணிப்பதற்காக புதிய கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் 12 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வங்கிகள் இதுவரை மத்திய வங்கிகளிடம் இருந்து மொத்தம் சுமார் 165 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா