காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் கேஸ் குடோனில் தீவிபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து 7பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் கேஸ் குடோடன் செயல்பட்டு வருகிறது. இது அந்த பகுதி கிராம ஊராட்சி மன்ற தலைவரான அஜய் குமாருக்கு சொந்தமாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குடோனில் தீடிரென ஒரு கேஸானது கீழே விழுந்து வெடித்தாக கூறப்படுகிறது. இதனையெடுத்து அடுத்தடுத்து சிலிண்டர்களும் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்து வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளாகிய குடோனில் வேறு ஏவரேனும் உள்ளனரா எனவும் சோதனை நடத்தி
வருகின்றனர்.
இதில் குடோனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 7 பேர் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில தற்போது சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் சுணில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனமொழி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் அருகில் செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின் இணைப்பானது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மின்விளக்குகள் வரவழைக்கப்பட்டு தீயை அனைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது







