கரூரில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
கரூர் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் அமராவதி ஆற்றுப்படுகை உள்ளது. தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் ஆற்றுப்படுகையில் உள்ள முட்செடிகள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் விஷமிகள் சிலர் இந்த காய்ந்த செடிகளின் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனால் பற்றி எரிந்த தீயானது மளமளவென பரவியது. தீயை கட்டுபடுத்த உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக செய்ல்பட்டு பங்கின் பின்புறம் இருந்த செடிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்.இதனால் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்தது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
–வேந்தன்