டெல்லியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் மரச்சாமான்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி, கிர்ட்டி நகர் பகுதியில் மரச்சாமான்கள் மற்றும் நாற்காலி விற்கும் கடை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.…

டெல்லியில் மரச்சாமான்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி, கிர்ட்டி நகர் பகுதியில் மரச்சாமான்கள் மற்றும் நாற்காலி விற்கும் கடை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. மரக்கடையில் பற்றிய தீயானது வேகமாக அருகில் இருக்கும் இடங்களுக்கு பரவத்தொடங்கியது. உடனடியாக இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ச,ம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.