பழனி முருகன் கோயிலில் படக்குழு – அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த Suriya46!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் சூர்யாவின் 45வது படமாக உருவாக உள்ளது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் 46வது படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அண்மையில் மமிதா பைஜு  இணைந்தார். அவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா 46 திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இது குறித்த தயாரிப்பு நிறுவனம் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில், படக்குழு பழனி முருகன் கோயிலில் வழிபட்டதாகவும், சூர்யா 46 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற ஜூன் 09 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.