மத்திய அரசு கொண்டுவந்துள்ள உர விலை ஏற்றத்தைக் கண்டித்தும், தீர்ப்பாயத்தைக் கலைத்த செயலைக் கண்டித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் பெரும் பங்காற்றும் உரத்தின் விலையை 58 சதவிகிதம் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் டி.ஏ.பி உரம் மற்றும் என்.பி.கே உரத்தின் விலைகள் அதிகரித்துள்ளது. இந்த உர விலை ஏற்றத்தினால் விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த உரவிலை ஏற்றம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் உர விலையை உயர்த்திய மத்திய அரசின் செயலுக்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “50 கிலோ டி.ஏ.பி உர மூட்டையின் விலை 1200லிருந்து 1900 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இத்தகைய செயலானது விவசாயிகள் வயிற்றில் மத்திய அரசு வெந்நீர் ஊற்றிய செயல்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அறிவுசார் மேல்முறையீட்டு சொத்துரிமை தீர்ப்பாயம் கலைத்த செயலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது, “அறிவுசார் மேல்முறையீட்டுத் சொத்துரிமை தீர்ப்பாயம் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மீதுள்ள எரிச்சலில் இந்த தீர்ப்பாயத்துடன் சேர்த்து மேலும் ஏழு தீர்ப்பாயங்களைக் கலைத்துள்ளது ஆளும் பாஜக அரசு. இத்தகைய செயலானது தமிழ்நாட்டிற்கு இழக்கப்பட்ட அநீதி” என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.