பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஆண் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இணையான சம ஊதியம் வழங்கப்படவேண்டும் என நீண்டநாள் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகின் தலைசிறந்த பெண் விளையாட்டு வீராங்கனைகளான செரினா வில்லியம் மற்றும் மித்தாலி ராஜ் உள்ளிட்ட பெண் விளையாட்டு வீராங்கனைகள், ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக சம ஊதியம் வழங்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி வீரர், வீராங்கனைக்கு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலின பாகுபாட்டை களையும் நடவடிக்கையின் முதல்படியாக ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்பட போவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல்களை ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பையில் சில்ஹெட்டில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.