30.5 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்: வடிவேலு பாணியில் பதிலளித்த கீர்த்தி சுரேஷ்

திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் பாணியில், நகைச்சுவையாகவும், சாமர்த்தியமாகவும் பொதுவெளியில் பதிவிட்டுள்ள நிகழ்வு, அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000-ஆம் ஆண்டில் மலையாளத்தில், சர்ச் கிட் என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழ் திரையுலகில், முதன் முறையாக 2015-ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில், விக்ரம் பிரபு கதாயகனாக நடித்து வெளிவந்த இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா, விஜய்யுடன் பைரவா, சர்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சாவித்திரியாக நடித்து எல்லோரின் பாராட்டையும் பெற்றவர், பிறகு ஹிந்தி திரையுலகிலும் கால் பதித்து அங்கும் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான தசரா திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்த நிலையில், திரைப்பிரலபங்கள் ஒவ்வொருவரும் தங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் ட்விட்டரில் பிரத்யோக ஹேஷ்டேக் மூலம் கேள்வியெழுப்பி, பிரபலங்கள் பதில் சொல்வது, இன்ஸ்டாவில் கேள்வி – பதில் பகுதி மூலம் உரையாடுவது, லைவ் மூலம் உரையாடுவது என பல வசதிகளும் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னிடம் கலந்துரையாட விருப்பம் உள்ளவர்கள், கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம் என தெரிவித்திருந்தார். இதனால், பலரும் நடிகை கீர்த்தி சுரேஷிடம் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி, அதற்கான பதிலையும் பெற்றனர். அப்போது ரசிகர் ஒருவர் நடிகையர் திலகம் படத்தில் நடித்த சாவித்திரி கதாபாத்திரம் மற்றும் தசரா படத்தில் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு திருப்தியை கொடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து கீர்த்தி சுரேஷ், இரண்டு கதாப்பாத்திரங்களுமே எனக்கு மிக முக்கியமானவை தான் . நடிகையர் திலகம் வாழ்க்கை கதை என்பதால் அதற்கான பயிற்சி எடுத்து நடித்தேன். அது மிகவும் சவாலாக இருந்தது. அதே நேரத்தில் எனக்கு நல்ல பாராட்டும் கிடைத்தது. தசரா படத்தில் கிராமிய பெண்ணாக வந்தேன். எனது சினிமா வாழ்க்கையில் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முக்கியமானவை என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, மற்றொரு ரசிகர் ஒருவர், நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் மீம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ‘தெரியாது’ என்பது போல், ரசிகரின் கேள்விக்கு நகைச்சுவையாகவும், சாமர்த்தியமாகவும் கீர்த்தி பதிலளித்ததாக அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading