மாணவியை கடத்தி சென்ற வழக்கில் போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகரைச் சேர்தவர் கண்ணன் என்ற விஜய கண்ணன். இவர் கடந்த 2016 ம் ஆண்டு அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தேர்வில்
முதலிடம் பிடித்த விஷயம் அறிந்து கொண்டு மாணவியின் பெற்றோரிடம் தான் மத்திய அரசாங்க தொலைக்காட்சியின் நிருபர் என்று அறிமுகமாகியுள்ளார்.
முதலிடம் பெற்றதால் மாணவிக்கு கலெக்டரிடம் தெரிவித்து பணம் வாங்கி தருவதாக மாணவியை விருதுநகர் அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து மதுரை, திருச்செந்தூர் என அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேட துவங்கினர். செல்போன் சிக்னல்கள், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கண்ணனை கைது செய்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வளாக போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீரப்பளிக்கப்பட்டது. 7 வருடம் மற்றும் 10 வருட தண்டனை என ஆக மொத்தம் 17 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.








