முக அடையாளம் காணும் சேவையை நிறுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கிறது பேஸ்புக். உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக செயலிகளையும் நிர்வகித்து வரும் பேஸ்புக், சமீபத்தில் தனது பெயரை மெட்டா என்று மாற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், பயனர்களுக்கு வழங்கி வந்த, முக அடையாளம் காணும் ( facial recognition) சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதி காரணமாக, புகைப்படங்கள், வீடியோக்களில் உள்ள முகத்தை தானாகவே பேஸ்புக் அங்கீகரித்துவிடும்.
பிறகு, உங்கள் முக ரேகை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பேஸ்புக்கில் பதி வேற்றப்பட்டால் இது குறித்த தகவல்களை உங்களுக்கும் தெரிவிக்கும். இதனால், பயனர் களின் தனியுரிமைப் பாதிக்கப்படுவதாக பலர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்த சேவையை பேஸ்புக் ரத்து செய்துள்ளது.
இனி, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களில் தானாகவே முகங்களை அடையாளம் காணாது என்றும் 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.