29.7 C
Chennai
April 24, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தமிழர் பாரம்பரியத்தின் மீது அதீத பற்று; தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து காதலர்கள்

தமிழர் பாரம்பரியத்தின் மீது கொண்ட பற்றால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காதலர்கள் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திண்டிவனம் ஆரோவில்லில் தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட காதலால் தமிழ் முறைப்படி வெளிநாட்டுத் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்கில் இவரது மகன் அலன் வயது 28 இவர்
இங்கிலாந்தில் உள்ள லியோ வயது 28 இருவரும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து
வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரோவில் வந்த அவர்கள்
இங்கேயே தங்கி அலன் ஆரோவில்லில் விவசாயப் பணி செய்து வருகிறார்.

அவரது காதலி ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மீது கொண்ட தீரா காதல் காரணமாகத் தமிழர்களின் பாரம்பரிய முறைகள் உடைகள் போன்றவற்றின் ஈர்ப்பு காரணமாக அவர்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையும் படிக்கவும்: ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!

இந்நிலையில் இன்று ஆரோவில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி சேலை அணிந்து மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டனர் இந்த செயல் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் மீது கொண்ட காதலால் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டுத் தம்பதிகளை அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading