கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன் – மருத்துவமனை அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன்  கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டார் என   மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன்  கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டார் என   மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னரே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு  போரூர் ராமச் சந்திரா மருத்துவமனை  “ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார்” எனவும் தெரிவிக்கப்பட்டது

இதனையும் படியுங்கள்: உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

இந்த நிலையில் இன்று போரூர் ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

“கடந்த 15ம் தேதி விகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் கொரோனாவிலிருந்து பூரணமாக மீண்டுள்ளார். கொரோனா சோதனையில் அவருக்கு தற்போது “நெகடிவ்” என முடிவுகள் வெளியாகியுள்ளது” என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.