நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னரே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: ரப்பர் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்: தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்
இந்த நிலையில் இன்று போரூர் ராமச் சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், “ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.