கல்லூரி மாணவியை ஈவ்டீசிங் செய்து மாணவியின் இறப்பிற்கு காரணமான மூன்று இளைஞர்களையும் கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 12ம் தேதி அந்த இளைஞர் மாணவியை ஈவ்டீசிங் செய்தாதாகவும், அப்போது மாணவி தனது செருப்பால் இளைஞரை அடித்து, திட்டியதாகவும் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அடுத்து கல்லூரி மாணவியின் மீது இருந்த கோபத்தில் காதல் தொல்லை கொடுத்த இளைஞர் அவரது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தயார் திருச்சி BHEL காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து மாணவியின் இறப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என கோரி மாணவியின் உறவினர்கள் மற்றும் நொச்சி வயல் புதூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் மலை கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.