விமானத்தில் பயணம் செய்ய நினைத்தவர் கூட அதே அளவு வசதி உள்ள வந்தே பாரத் ரயிலில் விரும்பி பயணம் செய்வதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், 25ஆவது வந்தே பாரத் ரயில்
வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பூர் ஐசிஎப் ரயில்வே மேலாளர், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை பார்வையிட்ட அவர், அதன் சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனம் என்ற பெயரை பெரம்பூர் ரயில் தொழிற்சாலை பெற்றிருப்பது மிகப்பெரிய பெருமை என்று கூறினார்.
பிரதமர் மோடியின் முயற்சியால் பல்வேறு நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்களில் பொதுமக்கள் விரும்பி பயணிப்பதாக அவர் கூறினார். விமானத்தில் பயணம் செய்ய நினைவத்தவர்கள் கூட அதிக வசதிகள் உள்ளதால் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.