ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கோரினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் இல்லத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எங்கள் தரப்பு போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கான முழு உரிமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடுவேன் என்று கூறினார்.இதைத்தொடர்ந்து இன்று கூட்டணி கட்சிகளை சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதேபோல் பாஜக, பாமக, தமமுக, புரட்சி பாரதம் கட்சி தலைவர்களையும் இன்று ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகிறார்.