இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் இன்று (ஆகஸ்ட் 4 ஆம் தேதி) தொடங்கி இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசு கிறது.
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தெரிகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸும் டொமினிக் சிப்ளேவும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்திய வீரர் பும்ரா, ரோரி பர்ன்ஸை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். அடுத்து களமிறங்கிய ஜாக் கிராளே, சிப்ளேவுடன் ஆடிவருகிறார்.
இந்தியா:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது சமி, முகம்மது சிராஜ்.
இங்கிலாந்து:
ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்ளே, ஜாக் கிராளே, ஜன்னி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஓலி ராபின்சன், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்,