அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று மதியம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் அபிராமபுரம் மாநகராட்சி பள்ளியில் கோடைக்கால வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முதலமைச்சர் அறிவுறுத்தல் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவசியம் இல்லாமல் பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், இரண்டு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, மூன்று சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, வாகனங்களில் செல்லும் போது போதுமான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்திய அவர், கோடை காலங்களில் வெளியே செல்லும் போது முடிந்தவரை, எலுமிச்சை உள்ளிட்ட பலச்சாறுகளை குடிக்க வேண்டும் எனவும் கேடுக்கொண்டார். மேலும், வெயில் காலத்தில் மதுபானங்கள் பெரிதும் உடலை பாதிக்கும் எனவும், தேநீர் காப்பி போன்றவைகளை வெயிலில் தவிர்க்க வேண்டும்
என கோரிக்கை விடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சர்க்கரை கொண்டு தயாரிக்க கூடிய குளிபானங்களை தவிர்ப்பது நல்லது என தெரிவித்தார்.
மேலும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று ஆலோசனை நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவக் கழிவுகள் கையாள்வது, சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற விவகாரம், மருத்துவக்கட்டமைப்புகள் மேம்படுத்தல் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.