நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் தேர்வு | யார் இந்த மோகன் யாதவ்?

மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரு வார போராட்டத்திற்கு பிறகு இன்று முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம்…

மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரு வார போராட்டத்திற்கு பிறகு இன்று முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.  மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தலைநகர் போபாலில் பாஜக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பது என பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தின் துணை முதல்வராக ஜகிதாஷ் தியோரா மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னாள் மத்திய அமைச்சரும்,  மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர்,  சட்டசபை சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த மோகன் யாதவ் ?

  • மோகன் யாதவ் சிவராஜ்சிங் சௌகான் அரசில் அமைச்சராக இருந்துள்ளார்.
  • சிவராஜ் சிங் சௌகான் அரசில் கல்வி அமைச்சராக மோகன் யாதவ் பதவி வகித்தார்.
  • மோகன் யாதவ் ஓபிசி பிரிவினரின் மிகப்பெரிய முகம் என கூறப்படுகிறது.
  • இவர் மோடி-அமித் ஷா தவிர, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் நெருக்கமானவர்.
  • மோகன் யாதவ் உஜ்ஜைனி தெற்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
  • இவர் எம்.ஏ., அரசியல் அறிவியலுடன்,  முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
  • உஜ்ஜயினி பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
  • தொடர்ந்து மூன்றாவது முறையாக உஜ்ஜைன் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.