நீட் காரணமாக உயிரை மாய்த்துக் மாணவரின் பெற்றோருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் தனுஷின் பெற் றோரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமாரின்…

நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் தனுஷின் பெற் றோரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் தேர்ச்சி பெறாத நிலையில், மூன்றாவது முறையாக இன்று நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்பதற்கு தயாராகி வந்தார். அதேநேரம், தனுஷ் நீட் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்ததாக கூறப் படுகிறது. இந்த சூழலில் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்டார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி, மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரு டன் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்ட மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.