பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த…

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டன. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் சில கட்டடங்கள் சேதமாகியுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நில அதிர்வின் மையம் அப்ரா மாகாணத்தில் உள்ள டோலோரஸ் நகரத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 11 கி.மீ.தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த 1990ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.