லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை; உடலை குப்பை தொட்டியில் வீசிய கும்பல்

அரியானாவில் சட்டவிரோத கல்குவாரி குற்றங்களை தடுக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய் லாரி மூலம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் குப்பை தொட்டி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

அரியானாவில் சட்டவிரோத கல்குவாரி குற்றங்களை தடுக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய் லாரி மூலம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் குப்பை தொட்டி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி டி.எஸ்.பி.யின் சகோதரர் மாகன் சிங் கூறும்போது, அது எனது சகோதரரின் வேலையல்ல. அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்த பின் அவர் அங்கு சென்றுள்ளார். இந்த செயலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி திட்டம் உள்ளது. இதுகுறித்து சுரங்க துறை உள்பட உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு யாரிடமிருந்து வந்தது என்பத குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

மேலும் துணிச்சலான, நேர்மையான அதிகாரியான சுரேந்திராவுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அவருடன் பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய அதிகாரியிடமும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

டிஎஸ்பி கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறும்போது, டி.எஸ்.பி. தனது வாகனம் அருகே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஓட்டுனரை நிறுத்தும்படி சைகை காட்டினார். சட்டவிரோத குவாரி பொருட்களை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் நிற்காமல் போலீசார் மீது மோதி, ஏற்றி விட்டு சென்றார் என கூறியுள்ளார்.

சில மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்பு அரியானா போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில், டிஎஸ்பி சுரேந்தர்சிங் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளி ஒருவர் கூட தப்ப முடியாது என கூறியுள்ளார்.

உயர் காவல் அதிகாரியையே லாரி ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.